|
குருவிக்கொணடான்பட்டியின்
முதல் ஓட்டு வீடாகிய கருத்தான் செட்டியார் வீட்டில், புரட்டாசி மாதம் இராமாயண
படிப்பது பரம்பரை பரம்பரையாக நடத்தப்படுகிறது. ஏடு எடுத்தல், இராமர் கல்யாணம்,
இராமர் பட்டாபிஷேகம் போன்ற முக்கிய நிகழ்ச்சிக்கு நகரத்தார், நாட்டார்களுக்கும்
சொல்லி எல்லோரும் கலந்து கொள்வார்கள். அந்தக்காலம் முதல் சிட்டைப்படி பிரசாதம்
தயார் செய்து சுவாமிகளுக்கு படைத்து பிறகு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இதுபோன்று சூரக்குடி
விர.பெரி.ராம.ராமன் செட்டியார் குடும்பத்தினராலும்; இரணிக்கோவில்
சோம.மு;சோம.கரு;சோம.சிமு குடும்பத்தினராலும் இராமாயணம் படிக்கப்படுகிறது.
|