Top Banner
  Wednesday, February 22, 2012  |  

அபிஷேக கட்டளைகள்

குருவிக்கொண்டான்பட்டி நகரச்சிவன் கோவிலில் தனிப்பட்ட நகரத்தார்கள் உபயமாக பல கட்டளைகளை எற்ப்படுத்தியுள்ளார்கள்.

உச்சிக்கால தளுகை கட்டளை

         உச்சிக்கால பூஜையின் போது தளுகை நிவேதனம் செய்வதற்காக இவ்வூர் பிள்ளையார்பட்டி கோவில் நத்தவனம் மு.சித.குடும்பத்தினர் அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் நாள் தோறும் இரண்டு தளுகைகள் தாயரித்து நிவேதனம் செய்யப்பட்டு வருகின்றது.

திருவனந்தல் தோசை கட்டளை

         அதிகாலை திருவனந்தல் பூஜையின் போது தோசை நிவேதனம் செய்வதற்காக இவ்வூர் சூரைக்குடி கோவில் வீர.சே.குடும்பத்தினர் அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் நாள் தோறும் திருவனந்தலின் போது தோசைகள் தயாரித்து நிவேதனம் செய்யப்படுகின்றது.

சாயரட்சை பூஜை நிவேதன கட்டளை

         சாயரட்சை பூஜையின் போது கடலைப்பருப்பு, சுண்டல் நிவேதனம் செய்வதற்காக இவ்வூர் இரணிக்கோவில் முப.அ.சொ.முப.அரு.குடும்பத்தினர் அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் நாள் தோறும் சாயரட்சை பூஜையின் போது கடலைப்பருப்பு, சுண்டல் நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

வியாழக்கிழமை தயிர்சாத நிவேதனக் கட்டளை

         வியாழக்கிழமை தோறும் உச்சிக்கால பூஜையின் போது தயிர்சாதம் நிவேதனம் செய்வதற்காக இவ்வூர் இரணிக்கோவில் மு.ப.அ.சொ.அ.சொ
குடும்பத்தினர் அறக்கட்டளை நிறுவி வியாழக்கிழமை தோறும் உச்சிக்கால பூஜையின் போது தயிர்சாதம் நிவேதனம் செய்யப்பட்டு
பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

நால்வர் குரு பூஜை கட்டளை

         சைவ சமய குரவர்களான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் குருபூஜைகளை ஆண்டு தோறும் நடத்த இவ்வூர் இளையாற்றங்குடி கழனிவாசல் கோவில் முப.மு.குடும்பத்தினர் அறக்கட்டளை நிறுவி ஆண்டு தோறும் நால்வர்களின் குருபூஜைகளை சிறப்பாக நடத்திவருகின்றார்கள்.

காலை சந்தி அபிஷேக கட்டளை

         குருவிக்கொண்டான்பட்டியில் வாழும் நகரத்தார்கள் கோவிலின் ஒருநாள் நடைமுறைச் செலவின் ஒரு பகுதியை உபயதாரர்/கட்டளைதாரர் ஏற்கும் விதமாக, புதிய திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்தில் சேரும் கட்டளைதாரரிடம் ரூ.3000/= வசூலிக்கப்படுகிறது. அதன் மூலம் அவர்கள் விருப்பத்தின் பேரில் குறிப்பிடும் ஆங்கிலத்தேதியில்; ஆண்டுக்கு ஒருமுறை காலசந்தி (காலைபூஜை) பூஜையின்போது - பால் அபிஷேகம் செய்து பிள்ளையார், சுவாமி, அம்மன் ஆகியவற்றிற்கு அவர்கள் பெயர், நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்யப்படுகிறது. கட்டளைதாரரின் விருப்பத்தின் பெயரில் அவர்கள் பிரதிநிதியிடம் காளாஞ்சி பிரசாதம் கொடுக்கப்படும். மேலும் கட்டளைதாரருக்கு தபாலில் விபூதி பிரசாதம் அனுப்பிவைக்கப்படும்.
         தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் ரூ.3000/= வீதம் அனுப்பிவைத்து இத்திட்டத்தில் சேர்ந்து அருள்தரும் சொக்கலிங்கப்பெருமான், மீனாட்சி அம்மனின் பேரருளைப் பெற வேண்டுகிறோம்.
         இந்த கட்டளை அபிஷேகத்திற்க்கு இத்துடன் இனைத்துள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவேண்டியது.

Increase எழுத்து வடிவம் Decrease | எழுத்து வண்ணம் Change Color

கடைசியாக இணையதளம் மாற்றியமைத்தது - 01/28/2012
உருவாக்கமும் பேணுதலும் இரா.இராமநாதன் மற்றும் பழ.அழகப்பன்